2. ஒரு அம்மாவிற்கு இரண்டு மகன்கள் . மூத்தவன் குடைகளைச் சரி செய்பவன் . இளையவன் பனை மட்டையால் விசிறி செய்து விற்பவன் . இரண்டு மகன்களும் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை அம்மாவிடம்தான் கொடுப்பார்கள் .
3. மழைக்காலம் வரும்போது அம்மா , “ மூத்தவனின் தொழில் நன்றாக நடக்கும் . இந்த மழைக்காலம் முடியும்வரை வருமானத்திற்குக் குறைவிருக்காது ” என்று நிம்மதியடைவார்கள் . ஆனால் மழை பெய்யத் தொடங்கினால் அம்மாவுக்குக் கவலை வந்துவிடும் . “ என் இளைய மகனின் விசிறிகளை மழைக்காலத்தில் யாரும் வாங்க மாட்டார்களே ” என்று வருந்துவார்கள் .
4. அந்த அம்மா , மழைக்காலத்தில் இளைய மகனைக் குறித்தும் , கோடைக் காலத்தில் மூத்த மகனைக் குறித்தும் கவலைப்படுவார்கள் . ஒரே சமயத்தில் இரண்டு மகன்களைக் குறித்தும் மகிழ்ச்சி கொள்ளும் நாள் வராதா என்று அவர்களுக்கு ஏக்கமாக இருந்தது . அம்மா அமைதியாகயோசித்து இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள் .
5. கோடைகாலத்தில் தங்கள் அம்மாவின் யோசனைப்படி மூத்தவனும் இளையவனும் சேர்ந்து விசிறி விற்றார்கள் . தனி ஆளாக இருந்து விசிறி வியாபாரம் செய்ததை விட இப்போது இரண்டு மடங்கு அதிகமாக லாபம் கிடைத்தது மழைக்காலத்தில் இருவரும் சேர்ந்தே குடைகளைச் சரிசெய்தார்கள் . அதிலும் அவர்களுக்கு முன்பைவிட அதிகமான வருமானம் கிடைத்தது . அந்த இளைஞர்கள் தங்கள் அம்மாவின் முடிவை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள் .
6. கொஞ்சம் ஆழ்ந்த முறையில் சிந்தித்துப் பார்த்தோமானால் , எந்தப் பிரச்சினைக்கும் நாமே தீர்வு கண்டுபிடித்துவிட முடியும் . நம்மால் முடிவெடுக்க முடியாதபோது நமக்கு நெருக்காமானவர்களின் ஆலோசனையைத் தயக்கமின்றி கேட்டுப் பெறலாம் . நன்றி தினமணி சிறுவர் மலர் 2342011 உங்களுக்கு வழங்குபவர் நா . பிரசன்னன்